டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 238- பேருக்கு கொரோனா


டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 238- பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 11 Jun 2021 12:40 PM GMT (Updated: 11 Jun 2021 12:40 PM GMT)

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 238 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா தொற்று 2-வது அலை பரவல் வேகம் கணிசமாக கட்டுக்குள் வந்துள்ளது. கொரோனா கட்டுக்குள் வந்துள்ளதையடுத்து, டெல்லியில் ஊரடங்கில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.  டெல்லியில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. 

அதன் விவரம் வருமாறு: டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 238- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 504 ஆக உள்ளது.   கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக 24 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். 

டெல்லியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 30 ஆயிரத்து 671- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 01 ஆயிரத்து 977- ஆக உள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 24 ஆயிரத்து 772 ஆக இருக்கிறது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 3,922- ஆக உள்ளது. 


Next Story