மேற்கு வங்காளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மேற்கு வங்காளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வந்த நிலையில், தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்து உள்ளது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு வங்காளத்தில் மேலும் 4,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,52,987 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு இன்று புதிதாக 89 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 16,731 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 4,321 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 14,21,064 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு தற்போது வரை 15,192 பேர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story