கேரளாவில் இன்று 13 ஆயிரம் பேருக்கு கொரோனா - 171 பேர் பலி


கேரளாவில் இன்று 13 ஆயிரம் பேருக்கு கொரோனா - 171 பேர் பலி
x
தினத்தந்தி 12 Jun 2021 2:30 PM GMT (Updated: 12 Jun 2021 2:30 PM GMT)

கேரளாவில் இன்று 13 ஆயிரத்து 832 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா பரவல் தொடர்பான இன்றைய தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் இன்று 13 ஆயிரத்து 832 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 16 ஆயிரத்து 655 ஆக அதிகரித்துள்ளது. 

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 488 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 18 ஆயிரத்து 172 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 75 ஆயிரத்து 769 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தாக்குதலுக்கு இன்று 171 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 975 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 734 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Next Story