மே.வங்காளத்தில் மேலும் 4,286- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
மேற்கு வங்காளத்தில் மேலும் 4,286- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,286- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 3149 பேர் குணம் அடைந்த நிலையில் 81- பேர் உயிரிழந்துள்ளனர்.
மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 57 ஆயிரத்து 273- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 24 ஆயிரத்து 213- ஆக இருக்கிறது. கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16,812- ஆக உள்ளது. கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 16,428- ஆகும்.
Related Tags :
Next Story