கோவாவில் 21- ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
கோவாவில் வரும் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பானஜி,
கோவாவில் கொரோனா தொற்று பரவல் முழுவதுமாக கட்டுக்குள் வராததால் ஊரடங்கு வரும் 21- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் கடைகள் மற்றும் நகராட்சி அலுவலகங்கள் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்படும் என்று முதல் மந்திரி பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
திருமண விழாக்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் எனவும் ஊரடங்கு வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவாவில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு வரும் 14 ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. கோவாவில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 5,201- ஆக உள்ளது.
Related Tags :
Next Story