ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,549 பேருக்கு கொரோனா
ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,549 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமராவதி,
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,549- பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 18,14,393 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 10,114 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 17,22,381 பேர் குணமடைந்துள்ளனர்.
மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 59 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 11,999 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி தற்போது வரை 80,013 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில் ஆந்திராவில் கொரோனா ஊரடங்கு வரும் 20 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story