இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை 25 கோடியை தாண்டியது


இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை 25 கோடியை தாண்டியது
x
தினத்தந்தி 14 Jun 2021 4:54 PM GMT (Updated: 14 Jun 2021 4:54 PM GMT)

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை 25 கோடியை தாண்டியுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் அவசர கால பயன்பாட்டுக்கு கடந்த ஜனவரி 3-ந் தேதி அனுமதி வழங்கப்பட்டது.
 
இதையடுத்து ஜனவரி 16-ந் தேதி கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. பொதுமக்களும் ஆர்வமுடன் சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் இந்தியாவில் இன்று இரவு 7 மணி தரவுகளின் படி 25 கோடியே 87 லட்சத்து 13ஆயிரத்து 321 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story