மும்பை, தானே நகரங்களில் பரவலாக மழை
மராட்டியத்தில் கடந்த 9 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது.
மும்பை,
நாட்டில் அதிக மழை பொழிவை தரும் தென்மேற்கு பருவமழை கடந்த வாரம் மராட்டியத்தில் தொடங்கியது. பருவமழை தொடங்கியதில் இருந்தே மும்பை உள்ளிட்ட இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், வரும் 17 ஆம் தேதி வரை மும்பையில் கனமழை இருக்கும் என எச்சரித்த வானிலை ஆய்வு மையம், மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை முதல் லேசான மழை மும்பையில் பெய்து வருகிறது. நேற்று இரவு நல்ல மழை பெய்தது. இதனால், மழை நீர் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. அதேபோல், தானே நகரத்திலும் மழை பெய்து வருகிறது.
Related Tags :
Next Story