இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை: ஐ.சி.எம்.ஆர்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 16 Jun 2021 5:00 AM GMT (Updated: 16 Jun 2021 5:00 AM GMT)

இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று 19.30 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் வேகம் சற்று குறைந்து வருகிறது. கொரோனா பரவலின் 2-வது அலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகள் காரணமாக நோய்த் தொற்றில் இருந்து குணமடைபவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறியும் வகையில் பரிசோதனைகளும் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 62 ஆயிரத்து 224 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாகவும், மேலும் 1 லட்சத்து 07 ஆயிரத்து 628 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 8,65,432 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும், நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 26 கோடியே 19 லட்சத்து 72 ஆயிரத்து 014 ஆக உள்ளது என்றும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 28,00,458 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது.  

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 19,30,987 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 38,33,06,971 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது. 

Next Story