கொரோனா தடுப்பூசி இரண்டு 'டோஸ்'களும் போட்டுக் கொண்டார் சோனியாகாந்தி: ராகுல்காந்தி காத்திருப்பு

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களும் போட்டுக் கொண்டார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கொரோனா தடுப்பூசி இரண்டு 'டோஸ்'களும் போட்டுக் கொண்டார். ராகுல்காந்திக்கு 'பாசிடிவ்' இருந்ததால், அவர் இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை.
இந்தநிலையில் இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில்,
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களும் போட்டுக் கொண்டார். கடந்த மே 16ல் தடுப்பூசி போட்டுக் கொள்ள ராகுல் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவருக்கு கொரோனா பரிசோதனை முடிவில் பாசிடிவ் என்று வந்திருந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு, மூன்று மாதங்களுக்கு பிறகே தடுப்பூசி போட வேண்டும் என்பது ஐசிஎம்ஆரின் விதி என்பதால் ராகுல்காந்தி தடுப்பூசி போட காத்திருக்கிறார் என்றார். ராகுல்காந்தி விரைவில் தடுப்பூசி எடுத்துக்கொள்வார் என்று கூறப்படுகிறது.
சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தடுப்பூசி எடுத்தது குறித்து தங்களின் தடுப்பூசிகளின் விவரங்களை காங்கிரஸ் தெரிவிக்குமா? என பாஜக தலைவர்கள் கேள்வி எழுப்பியதை அடுத்து இந்த கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story