ஜார்க்கண்ட்: காப்பக சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; மேலாளர், மனைவி உள்பட 4 பேர் கைது
ஜார்க்கண்ட் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் மேலாளர், மனைவி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஜாம்ஷெட்பூர்,
ஜார்க்கண்டின் சிங்ராவ்லி மாவட்டத்தில் ஜாம்ஷெட்பூர் நகரில் டெல்கோ என்ற இடத்தில் அன்னை தெரசா நல அறக்கட்டளை என்ற பெயரில் காப்பகம் ஒன்று செய்ல்பட்டு வருகிறது. இதன் மேலாளராக ஹர்பால் சிங் இருந்து வருகிறார்.
இந்நிலையில், காப்பகத்தில் வசிக்கும் சிறுமிகள் அளித்த புகாரின்பேரில் ஜாம்ஷெட்பூர் நகர எஸ்.பி. தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில், பாலியல் துன்புறுத்தல் மற்றும் கட்டாயப்படுத்தி வேலை வாங்குதல் உள்பட பல கொடுமைகளுக்கு சிறுமிகள் உட்படுத்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதன் தொடர்ச்சியாக காப்பக மேலாளர் சிங், அவரது மனைவி புஷ்பா திர்கி, வார்டன் கீதா தேவி மற்றும் ஒருவர் என 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து அந்த காப்பகத்தில் இருந்து வேறு காப்பகத்திற்கு சிறுமிகள் மாற்றப்பட்டனர். இதில், 2 சிறுமிகள் காணாமல் போயுள்ளனர். அவர்களை கண்டுபிடிக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story