கேரளாவில் இன்று 12,469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


கேரளாவில் இன்று 12,469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 17 Jun 2021 12:58 PM GMT (Updated: 17 Jun 2021 12:58 PM GMT)

கேரளாவில் தற்போது 1,08,560 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், 

கேரள சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கேரளாவில் இன்று 1,14,894 மாதிரிகளை பரிசோதனை செய்ததில் புதிதாக 12,469 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 88 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,743 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் இன்று ஒரே நாளில் 13, 614 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதன் மூலம் கேரளாவில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,41,204-ஆக அதிகரித்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 1,08,560 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Next Story