சிவசேனா பவன் மீது யாரும் தீய கண் வைக்க துணிய முடியாது: சஞ்சய் ராவத்
அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை ராமர் கோவில் கட்ட நிலம் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ள நிலையில் இது ெதாடர்பாக சிவசேனா கட்சி பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் எழுதப்பட்டு இருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா இளைஞர் அணியினர் நேற்று முன்தினம் தாதரில் சிவசேனா பவனை நோக்கி ஊர்வலம் நடத்தினர். அப்போது பா.ஜனதா, சிவசேனா தொண்டர்கள் மோதிக்கொண்டது பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறியதாவது:-.
மும்பையில் உள்ள சிவசேனா பவன் ஒரு அரசியல் கட்சியின் தலைமையகம் மட்டும் அல்ல. மராட்டியத்தின் அடையாள சின்னம். இதன்மீது யாரும் தீய கண் கொண்டு பார்க்கவும் துணியக்கூடாது. இப்படி இருக்கையில் சிவசேனா பவனை யாராவது ஒரு நபர் தாக்க முயன்றால் சிவசேனா தொண்டர்கள் அமைதியாக இருப்பார்களா?. பா.ஜனதா ஏன் இவ்வாறு கிளர்ந்தெழுந்தது? சிவசேனாவின் தலையங்கம் அப்படி என்ன கூறிவிட்டது?. நாங்கள் பிரச்சினையை இத்துடன்
முடித்துக்கொள்ள விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story