டெல்லியில் குறைந்து வரும் கொரோனா - புதிதாக 165 பேருக்கு தொற்று உறுதி


Image courtesy : AP
x
Image courtesy : AP
தினத்தந்தி 18 Jun 2021 11:42 AM GMT (Updated: 18 Jun 2021 11:42 AM GMT)

தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 165 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி,

தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு பெருமளவு குறைந்து வருகிறது. அந்த வகையில், இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை டெல்லி அரசு வெளியிட்டது.

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 165 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 14 லட்சத்து 32 ஆயிரத்து 33 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 445 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து மேலும் 260 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், டெல்லியில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 14 லட்சத்து 4 ஆயிரத்து 688 ஆக அதிகரித்துள்ளது. 

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தலைநகர் டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 24 ஆயிரத்து 900 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 76 ஆயிரத்து 480 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் கொரோனா உறுதியாகும் சதவிகிதம் 0.22% என்ற அளவில் உள்ளது.

Next Story