கேரளாவில் இன்று 12,443 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


கேரளாவில் இன்று 12,443 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 19 Jun 2021 3:16 PM GMT (Updated: 19 Jun 2021 3:16 PM GMT)

கேரளாவில் தற்போது 1,09,794 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், 

கேரள சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கேரளாவில் இன்று புதிதாக 12,443 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரளாவில் இதுவரை பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 27,97,747 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 115 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,948 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் இன்று ஒரே நாளில் 13,145 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதன் மூலம் கேரளாவில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,78,499-ஆக அதிகரித்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 1,06,861 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story