அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்ற வரலாற்று சிறப்புமிக்க முடிவை பிரதமர் மோடி எடுத்துள்ளார் - அமித்ஷா புகழாரம்
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி என்ற வரலாற்று சிறப்புமிக்க முடிவை பிரதமர் மோடி எடுத்துள்ளார் என்று உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
காந்திநகர்,
உள்துறை மந்திரி அமித்ஷா இன்று குஜராத் சென்றுள்ளார். தனது பாராளுமன்ற தொகுதியான காந்திநகரில் உள்ள கொரோனா தடுப்பூசி மையத்தை அமித்ஷா இன்று நேரில் பார்வையிட்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி என்ற வரலாற்று சிறப்புமிக்க முடிவை பிரதமர் மோடி எடுத்துள்ளார்.
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இது மிகவும் முக்கியமான முடிவாகும். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கிட்டத்தட்ட அனைவரையும் தடுப்பூசி போடும் இலக்கை விரைவாக நாம் அடைவோம். பிரதமர் மோடியின் தலைமையில் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் மிகவும் முக்கியமான பயணம் தொடங்கியுள்ளது’ என்றார்.
Related Tags :
Next Story