ஆந்திராவில் மேலும் 4,169- பேருக்கு கொரோனா தொற்று


ஆந்திராவில் மேலும் 4,169- பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 22 Jun 2021 12:42 PM GMT (Updated: 22 Jun 2021 12:42 PM GMT)

ஆந்திராவில் மேலும் 4,169- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமராவதி,

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,169- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் 8,376- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக 53- பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.  

கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் 53,880-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணம்  அடைந்தவர்கள் எண்ணிக்கை 17 லட்சத்து 91 ஆயிரத்து 056- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,416- ஆக உயர்ந்துள்ளது.

Next Story