டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 134-பேருக்கு கொரோனா
டெல்லியில் கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் 8 பேர் பலியாகியுள்ளனர்.
புதுடெல்லி,
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 134 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை
14,32,778 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்து 467 பேர் வீடு திரும்பியுள்ளனர். 8 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 14,05,927 பேர் குணமடைந்துள்ளனர். 24,933 பேர் பலியாகியுள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1,918- ஆக உள்ளது. தொற்று பாதிப்பு விகிதம் 0.2 சதவிகிதமாக உள்ளது.
Related Tags :
Next Story