தடுப்பூசி போடுவதில் நாட்டின் முதலாவது மாநிலமாக மத்தியபிரதேசம் உருவெடுத்துள்ளது - சிவராஜ்சிங் சவுகான் பெருமிதம்


தடுப்பூசி போடுவதில் நாட்டின் முதலாவது மாநிலமாக மத்தியபிரதேசம் உருவெடுத்துள்ளது - சிவராஜ்சிங் சவுகான் பெருமிதம்
x
தினத்தந்தி 22 Jun 2021 7:31 PM GMT (Updated: 22 Jun 2021 7:31 PM GMT)

மக்களுக்கு தடுப்பூசி போடுவதில் நாட்டின் முதலாவது மாநிலமாக மத்தியபிரதேசம் உருவெடுத்துள்ளதாக முதல் மந்திரி சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

போபால்,

நாடு முழுவதும் தற்போது கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் மத்திய பிரதேசத்தில் ஒரு பெரும் தடுப்பூசி பணியை அம்மாநில அரசு தொடங்கியுள்ளது. அதன் தொடக்க நாளான நேற்று முன்தினம், மொத்தம் 16.95 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சமூக ஊடகத்தில் தனது மனநிறைவை வெளியிட்டுள்ள முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், மக்களுக்கு தடுப்பூசி போடுவதில் நாட்டின் முதலாவது மாநிலமாக மத்தியபிரதேசம் உருவெடுத்துள்ளது. ஒவ்வொரு இந்தியருக்கும் இலவச தடுப்பூசி அளிக்கும் பிரதமர் மோடியின் மனிதாபிமான முடிவுக்கு, மத்தியபிரதேசத்தின் 8 கோடி மக்களும் தங்கள் இதயப்பூர்வ நன்றியைத் தெரிவிக்கின்றனர் என்று கூறியுள்ளார்.

Next Story