இந்தியாவில் 40 பேர் டெல்டா பிளஸ் வகை கொரோனாவால் பாதிப்பு - சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்


இந்தியாவில் 40 பேர் டெல்டா பிளஸ் வகை கொரோனாவால் பாதிப்பு - சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்
x
தினத்தந்தி 23 Jun 2021 10:51 PM GMT (Updated: 23 Jun 2021 10:51 PM GMT)

இந்தியாவில் 40 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

சீனாவின் உகானில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகிறது. அந்தவகையில் பல நாடுகளில் உருமாறிய வைரஸ் பரவல் காணப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் சமீபத்தில் புதிய வகை மாறுபாடு கண்டறியப்பட்டது. இதற்கு டெல்டா என பெயரிடப்பட்டு இருக்கிறது. இது வேறு பல நாடுகளில் பரவி வருவதும் கண்டறியப்பட்டது.

இந்தநிலையில் கொரோனாவின் மற்றொரு மாறுபாடான டெல்டா பிளஸ் தொற்று (ஏ.ஒய்.1) அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கண்டறியப்பட்டு இருக்கிறது. இது இந்தியாவிலும் தனது வேலையை காட்டி வருகிறது. அந்தவகையில் மராட்டியம், கேரளா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுமார் 40 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. 

தொடர்ந்து உருமாறி வரும் கொரோனாவின் புதிய வைரஸ்களை கவலைக்குரிய மாறுபாடு மற்றும் நலனுக்குரிய மாறுபாடு என இரு வகையாக உலக சுகாதார நிறுவனம் பிரித்து உள்ளது. இதில் டெல்டா பிளஸ் தொற்று கவலைக்குரிய மாறுபாடாக கண்டறியப்பட்டு உள்ளது. எனினும் பரவல் விவகாரத்தில் இந்த ைவரசில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story