பீகார்: மின்னல் தாக்கி குழந்தைகள் உள்பட 5 பேர் பலி


பீகார்: மின்னல் தாக்கி குழந்தைகள் உள்பட 5 பேர் பலி
x
தினத்தந்தி 28 Jun 2021 7:00 PM GMT (Updated: 28 Jun 2021 7:00 PM GMT)

பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கி 4 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

பாட்னா,

பீகார் மாநிலம் சாஹர்சா மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்தது. கனமழையால் அம்மாவட்டத்தின் பக்டியர்பூர் பகுதியில் கடுமையான காற்றும் மற்றும் மின்னலும் தொடர்ச்சியாக ஏற்பட்டது.

அப்போது, அப்பகுதியில் இருந்த குழந்தைகள் மீது மின்னல் தாக்கியது. இந்த மின்னல் தாக்குதலில் 4 குழந்தைகள் உள்பட 5 பேர் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒரு நபர் படுகாயமடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மின்னல் தாக்கி உயிரிழந்த 5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.   

Next Story