கர்நாடகத்தில் 2 கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன - சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தகவல்


கர்நாடகத்தில் 2 கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன - சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தகவல்
x
தினத்தந்தி 2 July 2021 2:33 AM GMT (Updated: 2 July 2021 2:33 AM GMT)

கர்நாடகத்தில் இதுவரை 2 கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை சார்பில் தேசிய டாக்டர்கள் தின விழா பெங்களூரு மாகடி ரோட்டில் உள்ள ஆரோக்கிய சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கலந்து கொண்டு, விழாவை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது;-

போரில் வீரமரணம் அடையும் ராணுவ வீரர்களை, தியாகிகள் என்று அழைக்கிறோம். நாட்டில் கொரோனாவுக்கு எதிராக போராடி 700-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். உயிர்த்தியாகம் செய்த டாக்டர்களின் நினைவாக இந்த ஆரோக்கிய சவுதாவில் டாக்டர்கள் நினைவு சின்னம் அமைக்கப்படும். 

நோயாளிகளை காப்பாற்ற டாக்டர்கள் கடைசி வரை போராடுகிறார்கள். எந்த நோயாளியும் இறக்க வேண்டும் என்று டாக்டர்கள் விரும்ப மாட்டார்கள். அதனால் டாக்டர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை தாக்குவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. டாக்டர்களை தாக்கினால் 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். 
கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை. மாநிலத்தில் இதுவரை 2 கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் 9 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி கர்நாடகம் வந்துள்ளது.”

இவ்வாறு சுதாகர் பேசினார்.

Next Story