இந்தியாவில் மேலும் 44,111-பேருக்கு கொரோனா-சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்திற்கு கீழ் குறைந்தது


இந்தியாவில் மேலும் 44,111-பேருக்கு கொரோனா-சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்திற்கு கீழ் குறைந்தது
x
தினத்தந்தி 3 July 2021 4:09 AM GMT (Updated: 3 July 2021 4:09 AM GMT)

இந்தியாவில் தொற்று பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 738- பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,111- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 57,477- பேர் ஒரே நாளில் குணம் அடைந்துள்ள நிலையில், தொற்று பாதிப்புக்கு மேலும் 738- பேர் உயிரிழந்துள்ளனர்.  

நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 05 லட்சத்து 02 ஆயிரத்து 362- ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 96 லட்சத்து 05 ஆயிரத்து 779- ஆக உள்ளது.  தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 95 ஆயிரத்து 533- ஆக சரிந்துள்ளது. 

தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 01 ஆயிரத்து 050- ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 34 கோடியே 46 லட்சத்து 11 ஆயிரத்து 291- ஆக உயர்ந்துள்ளது. 

Next Story