சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் தாக்குதல்; 4 வாகனங்களுக்குத் தீவைப்பு
சத்தீஷ்கார் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் ஜெயஸ்வால் நெக்கோ தொழில் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட ஆம்டாய் இரும்புத்தாது சுரங்கம் உள்ளது. இங்கு இன்னும் உற்பத்தி தொடங்காதநிலையில், ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்த இரும்புத்தாது சுரங்க பகுதியில் நேற்று ஆயுதம் தாங்கிய நக்சலைட்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அங்கு சாலை அமைக்கும் பணிக்கு பயன்படுத்தப்பட்ட 4 வாகனங்களுக்கும் அவர்கள் தீவைத்தனர். தாக்குதலுக்குப் பின்பு, சுரங்கப் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் மாயமாகிவிட்டனர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். அவர்களுக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது.
Related Tags :
Next Story