இந்தியாவில் ஒரே நாளில் 18.38 லட்சம் மாதிரிகள் பரிசோதனை: ஐசிஎம்ஆர்


இந்தியாவில் ஒரே நாளில் 18.38 லட்சம் மாதிரிகள் பரிசோதனை: ஐசிஎம்ஆர்
x
தினத்தந்தி 4 July 2021 4:44 AM GMT (Updated: 4 July 2021 4:44 AM GMT)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,071- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் உச்சம் பெற்று தற்போது குறையத்தொடங்கியுள்ளது. தொற்று பரவலின் உச்சத்தில் நாளொன்றுக்கு 4 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு தற்போது 50 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது.  

இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய பரிசோதனைகளும் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் 18 லட்சத்து 38 ஆயிரத்து 940- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.  இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 41,82,54,953- ஆக உயர்ந்துள்ளது. 


Next Story