இந்தியாவில் கொரோனா பாதிப்பு உயர்வு; புதிதாக 45,892 பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில் நேற்றுடன் ஒப்பிடுகையில் கொரோனா பாதிப்பு உயர்ந்து புதிதாக 45,892 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45 ஆயிரத்து 892 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 7 லட்சத்து 9 ஆயிரத்து 557 அதிகரித்து உள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 817 பேர் உயிரிழந்துள்ளனர். இது நேற்றுடன் (930) ஒப்பிடும்போது சற்று குறைவாகும். இதனால், கொரோனா பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 5 ஆயிரத்து 28 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 44,291 பேர் குணம் அடைந்துள்ளனர். இதனால் மொத்த குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 98 லட்சத்து 43 ஆயிரத்து 825 ஆக உயர்ந்து உள்ளது.
கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 60 ஆயிரத்து 704 ஆக உள்ளது.
Related Tags :
Next Story