கால்வாயில் தவறி விழுந்த இளைஞர் - காப்பாற்ற முயன்ற 3 நண்பர்கள் உயிரிழப்பு


கால்வாயில் தவறி விழுந்த இளைஞர் - காப்பாற்ற முயன்ற 3 நண்பர்கள் உயிரிழப்பு
x
தினத்தந்தி 9 July 2021 7:46 AM GMT (Updated: 9 July 2021 7:46 AM GMT)

கால்வாயில் தவறி விழுந்த இளைஞரை காப்பாற்ற முயன்ற 3 நண்பர்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சித்தூர்,

சென்னையை சேர்ந்த லோகேஷ் தனது மனைவி பிரியா மற்றும் தனது 3 நண்பர்களான யுவராஜ், பாலாஜி, கார்த்திக் உடன் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள உப்பளமடுகு அருவிக்கு சென்றுள்ளார். 

கொரோனா பரவல் காரணமாக அருவிக்கு செல்ல அனுமதிக்கப்படாததால் நண்பர்கள் அனைவரும் அருகில் இருந்த கங்கா கால்வாய் பகுதியை சுற்றிப்பார்த்து விட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

அப்போது கால்வாயில் அருகே நின்று செல்பி எடுக்க முயன்ற யுவராஜ் கால்வாய்க்குள் தவறி விழுந்தார். இதனையடுத்து அவரை காப்பாற்றுவதற்காக மற்ற நண்பர்கள் கால்வாய்க்குள் குதித்துள்ளனர். 

ஆனால், தவறி விழுந்த யுவராஜ் கால்வாய் ஓரத்தில் செடிகளை பிடித்து தப்பித்த நிலையில் அவரை காப்பாற்ற முயன்ற மற்ற 3 நண்பர்களும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர். 

இது குறித்து பிரியா போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து கால்வாயில் மூழ்கி உயிரிழந்த அவரது கணவர் லோகேஷ் உள்பட 2 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட கார்த்திக்கின் சடலத்தை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



Next Story