ஒடிசாவில் மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கி சண்டை; 2 போலீஸ்காரர்கள் காயம்


ஒடிசாவில் மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கி சண்டை; 2 போலீஸ்காரர்கள் காயம்
x

ஒடிசாவின் பவுத் மற்றும் கந்தமால் மாவட்டங்களின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள உமா காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கே மறைந்திருந்த மாவோயிஸ்டுகள், போலீசாரை கண்டதும், அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். உடனே பாதுகாப்பு படையினரும் திருப்பி தாக்குதல் நடத்தினர். நீண்ட நேரம் நீடித்த இந்த சண்டையில் போலீஸ்காரர்கள் 2 பேர் காயமடைந்தனர். மேலும் மாவோயிஸ்டுகள் சிலரும் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஒடிசா போலீஸ் டி.ஜி.பி. சம்பவ இடத்துக்கு உடனே விரைந்தார். பின்னர் காயமடைந்த 2 போலீஸ்காரர்களையும் ஹெலிகாப்டர் மூலம் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதற்கிடையே சம்பவ இடத்தில் கூடுதல் வீரர்கள் வரவழைக்கப்பட்டு, மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை தொடர்ந்து வருகிறது. இந்த சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story