மத்திய பெண் மந்திரிகளுக்கு தேநீர் விருந்து அளித்த நிர்மலா சீதாராமன்


மத்திய  பெண் மந்திரிகளுக்கு தேநீர் விருந்து அளித்த நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 11 July 2021 2:10 PM GMT (Updated: 11 July 2021 2:10 PM GMT)

மத்திய மந்திரி சபை அண்மையில் மாற்றி அமைக்கப்பட்டது. இதில் 7 பெண்கள் உள்பட 43 பேர் புதிதாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

புதுடெல்லி,

மத்திய மந்திரி சபை அண்மையில் மாற்றி அமைக்கப்பட்டது. இதில் 7 பெண்கள் உள்பட 43 பேர் புதிதாக பதவி  ஏற்றுக்கொண்டனர். இதன்படி, மத்திய மந்திரி சபையில் தற்போது 9 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். 

மூத்த மத்திய பெண் மந்திரிகளான நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி இரானி ஆகியோருடன் புதிதாக பெண் மந்திரிகள் தர்ஷணா விக்ரம் ஜர்தோஷ், பிரதிமா பவுமிக், ஷோபா கரண்ட்லேஜே, பாரதி பவார், மீனாட்சி லேகி, அனுபிரியா படேல், அன்னபூர்ணதேவி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், மத்திய மந்திரி சபையில் இடம் பிடித்துள்ள பெண் மந்திரிகளுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தேநீர் விருந்து அளித்தார்.  நிர்மலா சீதாராமன் இல்லத்தில் இந்த தேநீர் விருந்து நடைபெற்றது. 


Next Story