கொரோனா 3-வது அலை ஏற்பட்டால் மக்களுக்கு உதவ ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு சிறப்பு பயிற்சி


கொரோனா 3-வது அலை ஏற்பட்டால் மக்களுக்கு உதவ ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு சிறப்பு பயிற்சி
x
தினத்தந்தி 12 July 2021 12:47 AM GMT (Updated: 12 July 2021 12:47 AM GMT)

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை ஓய்ந்து வரும் நிலையில், நாட்டில் 3-வது அலையும் தாக்கக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் ஏற்கனவே எச்சரித்து இருந்தனர். மேலும் இந்த அலையில் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என கூறியிருந்தனர்.

அப்படி 3-வது அலை ஏற்பட்டால் அப்போது மக்களுக்கு உதவுவதற்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு திட்டம் தீட்டி வருகிறது. குறிப்பாக, மக்களுக்கு உதவுவதற்காக ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் நடைபெறும் இந்த முகாம் ஆகஸ்டு 1-ந் தேதி சில பகுதிகளில் தொடங்கும். அடுத்த சில நாட்களில் பிற பகுதிகளிலும் நடத்தப்பட்டு, அடுத்த மாத இறுதிக்குள் இந்த பயிற்சி முடிக்கப்படும். இதில் கொரோனாவில் சிக்கியுள்ள தாய்மார்கள், குழந்தைகளுக்கு உதவுவது தொடர்பாகவும், பெருந்தொற்று நேரத்தில் மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து பணியாற்றுவது தொடர்பாகவும் இந்த பயிற்சி வழங்கப்படும்.

இந்த தகவல்களை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில பாரதிய பிரசார பிரமுகர் சுனில் அம்பேத்கர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Next Story