நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஏற்பாடுகளை ஆய்வு செய்த சபாநாயகர் ஓம் பிர்லா
நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டத்தொடர் காலை 11 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறும் என சபாநாயகர் அறிவித்து உள்ளார்.
புதுடெல்லி
நாட்டில் கொரோனா பாதிப்புகளுக்கு இடையே நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டத்தொடர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடவுள்ளது. இதுபற்றி சபாநாயகர் ஓம் பிர்லா செய்தியாளர்களிடம் கூறும்போது, நாடாளுமன்ற பருவகால கூட்டத்தொடர் வருகிற 19ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 13ந்தேதி வரை நடைபெறும்.
19 நாட்கள் வேலை நாட்களாக இருக்கும். நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டத்தொடரானது காலை 11 மணி முதல் மாலை 6 மணிவரை வேலை நாட்களில் நடைபெறும் என அறிவித்து உள்ளார்.
இதன்பின்னர் நாடாளுமன்ற பருவகால கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள் பற்றி சபாநாயகர் ஆய்வு மேற்கொண்டார்.
Related Tags :
Next Story