தாராவியில் விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி : சிவசேனா


தாராவியில்  விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி : சிவசேனா
x
தினத்தந்தி 12 July 2021 10:10 AM GMT (Updated: 12 July 2021 10:10 AM GMT)

மும்பை தாராவியில் அடுத்த 2-3 மாதங்களில் மக்களுக்கு 100% தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சிவசேனை எம்.பி. ராகுல் ஷெவாலே தெரிவித்தார்.

மும்பை,

ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் தற்போது கொரோனா தொற்று பரவல் கணிசமாக குறைந்துள்ளது. தாரவியில் நேற்று 3 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்புடன் அங்கு சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 21 ஆக உள்ளது.  

தொற்று பாதிப்பு குறைந்தாலும் அடுத்த அலை பாதிப்பை ஏற்படுத்துவதை தவிர்க்கும் நோக்கில் அங்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அடுத்த 2-3 மாதங்களில் தாராவியில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று  சிவசேனா கட்சி எம்.பி ராகுல் ஷெவாலே தெரிவித்துள்ளார். 


Next Story