மேகதாது அணை கட்டியே தீருவோம்: கர்நாடக உள்துறை அமைச்சர் சொல்கிறார்
மேகதாது அணை கட்டுமான பணியை நிறுத்தும் பேச்சுக்கே இடம் இல்லை என்று கர்நாடக உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பாக, சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்தித்து மேகதாது அணை பிரச்சினை குறித்து தமிழ்நாட்டின் நிலைபாட்டை விளக்கி, நமது மாநில விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியது. இந்த கூட்டத்தில் மேகதாது திட்டத்துக்கு மத்திய அரசு எந்த அனுமதியும் வழங்கக் கூடாது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மேகதாது அணை கட்டுமான பணியை நிறுத்தும் பேச்சுக்கே இடம் இல்லை. குடிநீர் விவகாரம் முக்கியமானது என்பதால் அணை கட்டுவதற்கும் மக்களின் நலனை பாதுகாக்கவும் மேகதாதுவில் அணை கட்ட கர்நடகாவிற்கு உரிமை உள்ளது.
குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் உச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. கர்நாடகாவில் கோரிக்கையை மத்திய அரசு சட்ட ரீதியாக பரிசீலிக்கும். பிரச்சினைகளை காவிரி தீர்ப்பாயம் தீர்த்து வைத்ததால் மேகதாது அணையை நிறுத்த எந்த காரணமும் இல்லை” என்றார்.
Related Tags :
Next Story