100வது ஆண்டில் முதுபெரும் தலைவர் சங்கரய்யா; கேரள முதல் மந்திரி வாழ்த்து


100வது ஆண்டில் முதுபெரும் தலைவர் சங்கரய்யா; கேரள முதல் மந்திரி வாழ்த்து
x
தினத்தந்தி 15 July 2021 1:54 PM GMT (Updated: 15 July 2021 1:54 PM GMT)

நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சங்கரய்யாவுக்கு கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.




திருவனந்தபுரம்,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், சுதந்திர போராட்ட வீரருமான என்.சங்கரய்யாவுக்கு இன்று (வியாழக்கிழமை) 100-வது வயது தொடங்குகிறது. அவரது நூற்றாண்டையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தமிழகம் முழுவதும் கொடியேற்று நிகழ்வு மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்துகிறது.

அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தனது வாழ்த்துகளை டுவிட்டர் வழியே இன்று பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், விடுதலை போராட்ட வீரரும், முதுபெரும் கம்யூனிஸ்டு தலைவருமான சங்கரய்யா தனது 100வது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறார். மக்களுக்கான தன்னலமற்ற அவரது சேவை, கம்யூனிஸ்டு கட்சியை கட்டியெழுப்புவதற்கான அவரது முன்னணி பணிகள் ஆகியன நாம் அனைவருக்கும் ஊக்கம் அளிப்பவை.  அன்பிற்குரிய தோழருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளார்.


Next Story