விஸ்வ இந்து பரிஷத் தலைவராக ரபிந்திர நரைன் சிங் தேர்வு


விஸ்வ இந்து பரிஷத் தலைவராக ரபிந்திர நரைன் சிங் தேர்வு
x
தினத்தந்தி 18 July 2021 2:20 AM GMT (Updated: 18 July 2021 2:20 AM GMT)

விஸ்வ இந்து பரிஷத் தலைவராக ரபிந்திர நரைன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி, 

விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவராக கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் முதல் பணியாற்றி வந்தவர், விஸ்ணு சதாசிவ கோக்ஜே (வயது 82). இவர் தலைவர் பதவியில் இருந்து விலக விரும்பியதால் புதிய தலைவர் தேர்வு நடந்தது.

இதில் துணைத்தலைவராக இருந்த ரபிந்திர நரைன் சிங் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பீகாரை சேர்ந்த இவர் எலும்பு மருத்துவ நிபுணர் ஆவார். இந்த துறையில் சிறந்த பணிக்காக பத்மஸ்ரீ விருதையும் இவர் பெற்றுள்ளார்.

விஸ்வ இந்து பரிஷத்தின் புதிய தலைவராக டாக்டர் ரபிந்திர நரைன் சிங் தேர்வு செய்யப்பட்ட தகவலை அமைப்பின் இணை பொதுச்செயலாளர் சுரேந்திர ஜெயின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதைப்போல அமைப்பின் தற்போதைய பொதுச்செயலாளரான மிலிந்த் பாரண்டே, மீண்டும் அந்த பொறுப்புக்கு தேர்வாகி இருப்பதாகவும் ஜெயின் கூறினார்.

Next Story