மராட்டியத்தில் நிலச்சரிவு; 4 பெண்கள் உள்பட 5 பேர் பலி


மராட்டியத்தில் நிலச்சரிவு; 4 பெண்கள் உள்பட 5 பேர் பலி
x
தினத்தந்தி 19 July 2021 2:55 PM GMT (Updated: 19 July 2021 2:55 PM GMT)

மராட்டியத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பெண்கள் உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர்.



தானே,

வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  மராட்டியத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழையால், வெள்ளநீர் நகரெங்கும் பெருக்கெடுத்து ஓடுகிறது.  தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும், வீடுகளை சூழ்ந்தும் தண்ணீர் காணப்படுகிறது.

இந்நிலையில், மராட்டியத்தின் தானே மாவட்டத்தில் கல்வா பகுதியில் கனமழையை தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.  இதில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது.

இதுபற்றி அறிந்ததும், போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ பகுதிக்கு சென்று தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  இந்த விபத்தில் சிக்கி 4 பெண்கள் மற்றும் ஆண் ஒருவர் என மொத்தம் 5 பேர் பலியாகி உள்ளனர்.  மற்ற 2 பேர் மீட்கப்பட்டு உள்ளனர் என தானே மாநகராட்சி தெரிவித்து உள்ளது.


Next Story