ஆபாச பட வழக்கில் நடிகை சில்பா ஷெட்டியின் கணவர் கைது


ஆபாச பட வழக்கில் நடிகை சில்பா ஷெட்டியின் கணவர் கைது
x
தினத்தந்தி 19 July 2021 7:28 PM GMT (Updated: 20 July 2021 12:15 AM GMT)

ஆபாச பட வழக்கில் நடிகை சில்பா ஷெட்டியின் கணவர் கைது செய்யப்பட்டார்.

மும்பை, 

ஆபாச படங்கள் தயாரித்து, அவற்றை சில செயலிகள் மூலம் வெளியிட்டது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் மும்பை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று அதிரடி நடவடிக்கையாக பிரபல இந்தி நடிகை சில்பா ஷெட்டியின் கணவரும், தொழில் அதிபருமான ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ராஜ்குந்த்ரா முக்கிய குற்றவாளி என்றும், அவருக்கு எதிராக வலுவான ஆதாரம் இருப்பதாகவும் மும்பை போலீஸ் கமிஷனர் ஹேமந்த் நக்ராலே தெரிவித்தார். ஆபாச பட வழக்கில் பிரபல நடிகையின் கணவர் கைது செய்யப்பட்டு இருப்பது சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story