உத்தரபிரதேசத்தில் 9 மருத்துவ கல்லூரிகள்: 30-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 22 July 2021 2:58 AM GMT (Updated: 22 July 2021 2:58 AM GMT)

உத்தரபிரதேச மாநிலத்தில் 9 மருத்துவ கல்லூரிகளை வரும் 30-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார்.

லக்னோ, 

உத்தரபிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி வருகிற 30-ந் தேதி 9 மருத்துவ கல்லூரிகளை தொடங்கிவைக்கிறார் என மாநில அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

கொரோனா தொடர்பான ஆய்வு கூட்டத்துக்கு தலைமை தாங்கிய முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், சித்தார்த்நகரில் நடைபெறும் தொடக்கவிழாவில் மோடி பங்கேற்பார் என்றும், 9 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கல்லூரிகளை அவர் தொடங்கிவைப்பார் எனவும் தெரிவித்தார்.

Next Story