மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் நிலச்சரிவு; 36 பேர் உயிரிழப்பு
மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் நேற்று மூன்று இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டுகிறது. இதனால், மும்பை உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குறிப்பாக ராய்காட் மாவட்டத்தில் இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. தொடர் மழையால், ராய்காட் மாவட்டத்தில் மூன்று இடங்களில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது.
நிலச்சரிவில் சிக்கியவர்களில் 36 பேர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அதேபோல், வெள்ள நீர் சூழந்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை ஹெலிகாப்டர் மூலமாக மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story