ஆகஸ்டு 1-ந்தேதி முதல் ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் பார்க்க அனுமதி


ஆகஸ்டு 1-ந்தேதி முதல் ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் பார்க்க அனுமதி
x
தினத்தந்தி 23 July 2021 11:07 PM GMT (Updated: 23 July 2021 11:07 PM GMT)

ஜனாதிபதி மாளிகை மற்றும் அங்குள்ள அருங்காட்சியகத்தை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. எனினும் கொரோனா காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் மத்தியில் இருந்து இந்த அனுமதி ரத்து செய்யப்பட்டு இருந்தது.

தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1-ந்தேதி முதல் ஜனாதிபதி மாளிகை மற்றும் அங்குள்ள அருங்காட்சியகத்தை பார்வையிட பொதுமக்களுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்படும் என ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story