இந்தியாவில் செலுத்திய கொரோனா தடுப்பூசிகள் 42.78 கோடி
இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 42.78 கோடியை கடந்துள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் கொரோனா 2வது அலையில் முதல் அலையை விட தீவிர பாதிப்புகள் ஏற்பட்டன. இதனை தொடர்ந்து பொதுமக்கள் கொரோனா தடுப்பூசிகள் போட்டு கொள்வதில் முனைப்பு காட்டி வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 16,31,266 கொரோனா பரிசோதனைகளும் (நேற்று காலை), இதுவரை மொத்தம் 45,45,70,811 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,08,977 ஆக உள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 1.31 சதவீதம் ஆகும்.
இதேபோன்று நேற்று காலை 7 மணி வரையில், மொத்தம் 52,34,188 முகாம்களில் 42,78,82,261 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 42,67,799 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தொடா்ந்து 27 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகி வருகிறது.
Related Tags :
Next Story