பெகாசஸ் உளவு விவகாரம்: மேற்கு வங்காளத்தில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு அமைப்பு


பெகாசஸ் உளவு விவகாரம்:  மேற்கு வங்காளத்தில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு அமைப்பு
x
தினத்தந்தி 26 July 2021 8:02 PM GMT (Updated: 26 July 2021 8:02 PM GMT)

பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட ஒரு குழுவை மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அமைத்துள்ளார்.


கொல்கத்தா,

இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் என்னும் உளவுமென்பொருளை பயன்படுத்தி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட 300 முக்கிய பிரமுகர்களின் செல்போன்களை ஒட்டு கேட்க இலக்கு வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றுதிரண்டு போர்க்கோலம் பூண்டு வருகின்றன.  ஆதாரம் இல்லாதவை என கூறி, ஒட்டு கேட்பு புகார்களை மத்திய அரசும், பா.ஜ.க.வும் மறுத்து வருகின்றன.  ஆனாலும் நாடாளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கி உள்ளன.

இந்நிலையில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, மாநிலத்தில் பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளார். ஓய்வு பெற்ற நீதிபதிகள் எம்.வி. லோகூர் மற்றும் ஜோதிர்மாய் பட்டச்சாரியா ஆகியோர் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளார்.


Next Story