சத்தீஷ்காரில் சி.ஆர்.பி.எப். மீது சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்திய நக்சலைட்டு தளபதி கைது


சத்தீஷ்காரில் சி.ஆர்.பி.எப். மீது சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்திய நக்சலைட்டு தளபதி கைது
x
தினத்தந்தி 26 July 2021 11:03 PM GMT (Updated: 26 July 2021 11:03 PM GMT)

சத்தீஷ்காரில் 8 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நக்சலைட்டு தளபதியை போலீசார் கைது செய்துள்ளனர்.




ராய்ப்பூர்,

சத்தீஷ்காரில் செயல்பட்டு வந்த நக்சலைட்டு இயக்கத்தின் தளபதியான டைகர் ஹூங்கா என்பவரை சுக்மா போலீசார் கைது செய்துள்ளனர்.  இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு சுனில் சர்மா கூறும்போது, டைகர் ஹூங்காவை கடந்த 2013ம் ஆண்டில் இருந்து தேடி வருகிறோம்.

கடந்த 2018ம் ஆண்டு மத்திய ரிசர்வ் போலீசாருக்கு (சி.ஆர்.பி.எப்.) எதிராக நடந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதலுடன் தொடர்புடையவன்.  கடந்த ஆண்டு நடந்த மற்றொரு சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதலுடனும் தொடர்புடையவன் என கூறியுள்ளார்.

இதுதவிர, கிராமவாசிகளை படுகொலை செய்தும், அவர்களிடம் கொள்ளையடித்தும் உள்ளான் என்றும் அவர் கூறியுள்ளார்.




Next Story