ஆபாச பட வழக்கில் கைதான ராஜ்குந்த்ரா 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு
ஆபாச பட வழக்கில் கைதான நடிகை ஷில்பா ஷெட்டியில் கணவர் ராஜ்குந்த்ராவின் போலீஸ் காவல் இன்றுடன் முடிந்தது.
மும்பை,
மும்பை மலாடு, மத் ஐலேன்ட் பகுதியில் உள்ள சொகுசு பங்களாவில் ஆபாச படம் எடுத்து அதனை செல்போன் செயலியில் வெளியிட்ட வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் போலீசார் நடிகை வந்தனா திவாரியையும் கைது செய்து இருந்தனர்.
விசாரணையில் இந்த வழக்கில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழில் அதிபருமான ராஜ்குந்த்ராவுக்கு (வயது45) தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மும்பை குற்றப்பிரிவு போலீசார் அவரை கடந்த 19-ந் தேதி அதிரடியாக கைது செய்தனர்.
அவர் வழக்கில் முக்கிய குற்றவாளி என்றும் போலீசார் தெரிவித்தனர். 27 ஆம் தேதி வரை காவலில் எடுத்த போலீசார் ராஜ்குந்த்ராவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் காவல் முடிந்த நிலையில், ராஜ்குந்த்ராவை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story