கொரோனா காலத்தில் அமெரிக்கா பெரும் பாதிப்புகளை சந்தித்தபோது இந்தியா உதவியது: ஆண்டனி பிளிங்கன்


கொரோனா காலத்தில் அமெரிக்கா பெரும் பாதிப்புகளை சந்தித்தபோது இந்தியா உதவியது: ஆண்டனி பிளிங்கன்
x
தினத்தந்தி 28 July 2021 11:01 AM GMT (Updated: 28 July 2021 11:01 AM GMT)

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக இந்தியா மற்றும் அமெரிக்கா திகழ்வதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

2 நாள்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் இந்தியா வந்துள்ளார். அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரியாக பதவி ஏற்ற பின்னர், முதன்முறையாக அவர் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.   

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி அண்டனி பிளிங்கன் இன்று இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி இருந்தது. 

இந்நிலையில் கொரோனா ஆரம்ப காலத்தில் அமெரிக்கா பெரும் பாதிப்புகளை சந்தித்தபோது இந்தியா உதவியது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக இந்தியா மற்றும் அமெரிக்கா திகழ்கிறது. கொரோனா ஆரம்ப காலத்தில் அமெரிக்கா பெரும் பாதிப்புகளை சந்தித்தபோது இந்தியா உதவியது. தற்போது இந்தியாவிற்கு உதவுவதில் அமெரிக்கா பெருமைக்கொள்கிறது.

கொரோனா தொற்றுநோயை முடிவுக்கு கொண்டுவருவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், மேலும் தடுப்பூசி கூட்டாண்மையில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றாகச் செயல்படும். 


இந்தியாவுக்கு மீண்டும் வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் எனது குடும்பத்துடன் 40 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்தேன். டெல்லியில் 

ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பிராந்திய பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம். அமைதியான, பாதுகாப்பான மற்றும் நிலையான ஆப்கானிஸ்தானில் இந்தியாவும் அமெரிக்காவும் வலுவான ஆர்வத்தை பகிர்ந்து கொள்கின்றன. பிராந்தியத்தில் நம்பகமான பங்காளியாக, ஆப்கானிஸ்தானின் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து முக்கிய பங்களிப்பை அளிக்கும்” என்று அவர் கூறினார். 

Next Story