இந்திய சட்டத்தை மதிக்காத சோட்டா ராஜனுக்கு ஜாமீன் வழங்க கூடாது; கொலை முயற்சி வழக்கில் சி.பி.ஐ. எதிர்ப்பு


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 29 July 2021 12:35 AM GMT (Updated: 29 July 2021 1:01 AM GMT)

இந்திய சட்டத்தை மதிக்காத சோட்டா ராஜனுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று சி.பி.ஐ. ஐகோர்ட்டில் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்திய சட்டத்தை மதிக்காத சோட்டா ராஜனுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று சி.பி.ஐ. ஐகோர்ட்டில் எதிர்ப்பு தெரிவித்தது.

திகார் சிறையில் அடைப்பு
நீண்ட நாட்களாக வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த சோட்டா ராஜன், கடந்த 2015-ம் ஆண்டு இந்தோனேசியாவின் பாலி தீவில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். சோட்டா ராஜன் மீது கொலை, மிரட்டி பணம் பறித்தல், கொலை மிரட்டல் விடுத்தல் போன்ற பல்வேறு குற்றங்கள் தொடர்பாக 70 வழக்குகள் வரை நிலுவையில் இருக்கின்றன. இவர் தற்போது டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

8 ஆண்டு சிறை
இந்த நிலையில் ஓட்டல் ஊழியரை கொலை செய்ய முயன்ற வழக்கில் அவருக்கு மோக்கா சட்டத்தின் கீழ் 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து இடைக்கால ஜாமீன் வழங்க கோரி அவர் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். 

அந்த மனுவில், “நான்(சோட்டா ராஜன்) இந்த வழக்கில் குற்றச்சதி பிரிவால் மட்டும் தண்டிக்கப்பட்டு உள்ளேன். குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்கள், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஜாமீனில் வெளியே சென்றுள்ளனர். எனக்கு எதிராக நேரடி ஆதாரங்கள் எழுதும் இல்லை. 2 பேரின் வாய்வழி சாட்சியங்கள் மட்டுமே உள்ளன. 

இவ்வாறு அவர் கூறிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதி அனுஜா பிரபுதேசாய் தலைமையிலான ஒற்றை நீதிபதிகள் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. 
சி.பி.ஐ. எதிர்ப்பு
 இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சி.பி.ஐ. சார்பில் ஆஜரான வக்கீல் கூறியதாவது:-
சோட்டா ராஜனுக்கு “ இசட் பிளஸ் பாதுகாப்பு அச்சுறுத்தல்” உள்ளது. 
மேலும் அவருக்கு இந்திய சட்டத்தின் மீது எந்த மரியாதையும் இல்லை. அவர் பல்வேறு நாடுகளுக்கு தப்பி ஓடியவர். போலி பெயர் மற்றும் போலி பாஸ்போர்ட்டுடன் பயணித்து வந்தார். அதுமட்டுமின்றி அவருக்கு எதிராக 14 முதல் 15 வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. அவர் 12 வழக்குகளில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது மற்றும் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்குகளில் ஒன்றில் ஆயுள் தண்டனையும் கிடைத்துள்ளது என்று வாதாடினார். 

இந்த மனு மீதான விசாரணை 2 வாரங்களுக்கு பிறகு மீண்டும் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

Next Story