கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்வு: மாநில சுகாதாரத்துறை


கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்வு: மாநில சுகாதாரத்துறை
x
தினத்தந்தி 29 July 2021 4:48 PM GMT (Updated: 29 July 2021 4:48 PM GMT)

கேரளாவில் இன்று புதிதாக மேலும் 5 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் இன்று புதிதாக மேலும் 5 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரளாவில் இன்று புதிதாக மேலும் 5 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. இதில் 7 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியின் வைராலஜி ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளின் ஆரோக்கியமும் தற்போது திருப்திகரமாக உள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஜூலை 26ஆம் தேதி அன்று மொத்த பாதிப்பு எண்ணிக்கை 51 ஆக இருந்த நிலையில், 4 நாட்களில் மட்டும் மேலும் 10 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Next Story