ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைமை பொறுப்பை ஏற்றது இந்தியா


ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைமை பொறுப்பை ஏற்றது இந்தியா
x
தினத்தந்தி 2 Aug 2021 12:18 AM GMT (Updated: 2 Aug 2021 12:18 AM GMT)

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஆகஸ்டு மாதத்துக்கான தலைமை பொறுப்பை நேற்று இந்தியா ஏற்றுக்கொண்டது.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்ட ‘டுவிட்டர்’ பதிவில், ‘‘மற்ற உறுப்பினர் நாடுகளுடன் ஆக்கபூர்வமாக இணைந்து செயல்பட ஆர்வமாக இருக்கிறோம். நிதானத்தின் குரலாகவும், பேச்சுவார்த்தையை ஆதரிப்பவராகவும், சர்வதேச சட்டத்தை முன்வைப்பவராகவும் இந்தியா தொடர்ந்து செயல்படும்’’ என்று கூறியுள்ளார்.

இது மறக்க முடியாத நாள் என்றும், உலகத்தையே ஒரு குடும்பமாக பார்ப்பதுதான் இந்தியாவின் குணம் என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அறிந்தம் பக்ஷி தெரிவித்தார்.

Next Story