கர்நாடகத்தில் புதிதாக 1,285 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,285 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,285 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 25 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் இன்று 1,285 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,08,284-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 25 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,612-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,383 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக குணமடைந்தோர் 28,47,627-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 24,021 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்றனர்.
Related Tags :
Next Story