கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகள் மத்திய அரசின் உதவியை பெற வேண்டுமா? இணையம் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டுகோள்


கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகள் மத்திய அரசின் உதவியை பெற வேண்டுமா? இணையம் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டுகோள்
x
தினத்தந்தி 3 Aug 2021 12:27 AM GMT (Updated: 3 Aug 2021 12:27 AM GMT)

கொரோனாவில் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டத்துக்கு (ரூ.10 லட்சம் உள்பட) பி.எம்.கேர்ஸ் நிதியை பயன்படுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த மே 29-ந் தேதி தொடங்கி வைத்தார்.

புதுடெல்லி, 

கடந்த மார்ச் 11-ந் தேதி முதல் கொரோனா தொற்று காரணமாக பெற்றோர் இருவரையும் அல்லது சட்டப்பூர்வ காப்பாளர்கள் அல்லது தத்தெடுத்த பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டத்துக்கு (ரூ.10 லட்சம் உள்பட) பி.எம்.கேர்ஸ் நிதியை பயன்படுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த மே 29-ந் தேதி தொடங்கி வைத்தார். குழந்தைகளுக்கு முழுமையான அக்கறை அளிக்கவும், குழந்தைகள் நீண்ட காலம் பாதுகாப்பு பெறவும், உடல் நலத்தை காக்க மருத்துவக்காப்பீடு வசதி பெறவும், கல்வி பெறவும் அவர்களது 23-வது வயது வரை இத்திட்டம் உதவுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் உதவிபெற https://pmcaresforchildren.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Next Story